Monday, January 28, 2013

சொல்வனத்தில் வந்த என் கவிதை

எப்போதும் போல்

நாளை நான்
இன்னொருவனின் கல்லறையில்
ஒளிந்திருக்கலாம்.
ஒரு குழந்தையின் கைப்பிடி மண்,
யாரோ ஒருவரின் கண்ணீர்,
அல்லது
காறித்துப்பும் எச்சில்
என் மேல் விழலாம்.
யாவையும் அல்லாது
யாருடைய கல்லறையில்
ஒளிந்திருக்கிறேன்
என்பதைத்
தோண்டி அறியும் நாயாக
நானே இருக்கலாம்.
இருந்தும்,
இறுதியாய்க் கல்லெறிவது
எனக்கு
எப்போதும் போல்
சுலபமாய் இருக்கிறது.


நன்றி: சொல்வனம் 
http://solvanam.com/?p=23939

Wednesday, January 9, 2013

கால்சட்டை மனம்


கால்சட்டைப் பையில் 
மறைக்கப்படும் 
ஒவ்வொரு கையையும் போல, 

ஒரு மரணம் 
நட்பு 
பிரிவு 
துரோகம் 
அல்லது ஒரு பட்டியல்
மறைக்கப்படலாம்

பைகளும் கைகளும்
நிறையும் போது
கொஞ்சம் மனமும்.